விருதுநகர் விளையாட்டு அரங்கில் கோடைகால பயிற்சி முகாம் மே 1ம் தேதி முதல் தொடக்கம்

 

விருதுநகர்: விருதுநகர் விளையாட்டு அரங்கில் மே 1 முதல் 15 வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் தகவல்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டு அரங்கில் மே 1 முதல் 15 வரை காலை 6.30 முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் 6.30 வரை நடைபெற உள்ளது.முகாமில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகள் மாணவ, மாணவியருக்கு அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முகாமில் சிற்றுண்டி வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சீருடை, சான்றிதழ் வழங்கப்படும். பள்ளி மாணவ, மாணவியர் பயிற்சி முகாமில் சேர்ந்து விளையாட்டு திறனை மேம்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்