விருதுநகரில் மதுவிற்ற நபர் கைது

விருதுநகர், ஏப். 12: விருதுநகர் கட்டையாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன்பாக உரிய அனுமதியின்றி மதுவிற்பனை செய்வதாக பஜார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து எஸ்.ஐ கோபு தலைமையில் போலீசார் சோதனை நடத்திய போது சூலக்கரை வ.உ.சி நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன்(42) மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்து 87 மதுபாட்டில்கள் மற்றும் மது விற்பனை செய்த பணம் ரூ.7,380 பறிமுதல் செய்து கைது செய்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை