விருதுநகரில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

விருதுநகர், செப். 27: விருதுநகரில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முன்பிருந்து மகளிர் இன்னர்வீல் சங்கம், நியூ ஜென் இன்னல் வீல் சங்கம் இணைந்து போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பிருந்து கிளம்பிய பேரணி ராமமூர்த்தி ரோடு, விஎன்பிஆர் பார்க், கல்லூரி சாலையில் முடிவடைந்தது. மாணவ, மாணவியர் போதை தடுப்பு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி சென்றனர். இறுதியில் கிழக்கு காவல் நிலைய எஸ்ஐ ராமச்சந்திரன் மாணவ, மாணவியர் மத்தியில் போதை தடுப்பு விழிப்புணர்வு உரையாற்றினார். என்சிசி அலுவலர் பத்மநாபன், இன்னர் வீல் நிர்வாகிகள் ஜெயா, மீனாகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்