விராலிமலை அருகே கீழே விழும் நிலையில் உள்ள ஆபத்தான மின்கம்பம் மாற்ற வேண்டும்

விராலிமலை: விராலிமலை அருகே விழுந்துவிடும் நிலையில் நிற்கும் மின் கம்பத்தை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விராலிமலை அருகே உள்ள கொன்னகாட்டுப்பட்டி எனும் இடத்தில் குறைந்த அழுத்த மின்சாரத்தை தாங்கிச் செல்லும் மின்கம்பந்தின் மேற்பகுதியில் இருந்த சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து உள்ளிருக்கும் கம்பிகள் தெரியும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் உள்ளது. எனவே மின்வாரிய அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விபத்து ஏதும் நிகழும் முன் பழைய மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை