விராலிமலையில் இமானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா

விராலிமலை: விராலிமலை சோதனைச்சாவடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவபடத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் விராலிமலை ஒன்றிய செயலாளர் மாதுராப்பட்டி துரை தலைமை வகித்தார். இதில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் 100வது பிறந்தநாளையொட்டி அவரின் திருவுருவ படத்திற்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் அன்னவாசல் ஒன்றிய செயலாளர் சரவணன் உள்பட தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நகர ஒன்றிய பொருப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்