விராலிமலையில் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடு விற்பனை அமோகம்: வியாபாரிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை: விராலிமலை ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடியை தாண்டி ஆடுகள் விற்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தை வழக்கம்போல இன்று அதிகாலை 4 மணிக்கு கூடியது. நாளை மறுநாள் விராலிமலை அம்மன் கோயில் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில், ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக ஆடுகளை வாங்க குவிந்தனர். 7 கிலோ எடை கொண்ட ஆட்டின் விலை ரூ.9 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. ஆடுகள் விலை கிடுகிடுவென உயர்ந்ததால் இறைச்சிக்காக வாங்க வந்தவர்கள், ஆடுகளை வாங்க முடியாமல் திணறினர். பலர் வெளியூர்களில் இருந்து விராலிமலையில் தங்கி ஆடுகளை வாங்க வந்தனர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய வாரச்சந்தை, காலை 10 மணிவரை களைகட்டியது. நேர்த்திக்கடனை நிறைவேற்றும் கட்டாயத்தில் அதிகவிலையும் பொருட்படுத்தாமல் அதிகளவிலான ஆடுகளை வாங்கிச் சென்றனர்.        …

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்