வியாபாரியை தாக்கியவர் கைது

சேலம், ஜூலை 27: சேலம் புலிகுத்தி ஜங்சன் பகுதியில், சாலையோரத்தில் துணிக்கடை நடத்தி வருபவர் அம்ஜத்பாஷா(34). நேற்று முன்தினம், டூவீலரில் வந்த 2 பேர், அவரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, அம்ஜத்பாஷாவை தாக்கிய எருமாபாளையம் குதிரைபாலிகாடு பகுதியைச் சேர்ந்த மோகன்குமார்(28) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு