வியாபாரியை கத்தியால் தாக்கிய வாலிபர் கைது

தேன்கனிக்கோட்டை, மே 16: தேன்கனிக்கோட்டை கீழ்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகபூப்பாஷா மகன் அப்சல்பாஷா(22). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள எல்லப்பா என்பவரது காய்கறி கடைக்கு சென்று, கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அப்சல்பாஷா, கத்தியால் அவரை தாக்க முயன்றார். இதை பார்த்த அங்கிருந்த நந்தகுமார் (45) என்பவர், தடுக்க முயன்றார். இதில் அவரது வலது கை விரலில் கத்தியால் வெட்டியதில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து நந்தகுமார் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அப்சல்பாஷாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி