தர்மபுரி, பிப்.10: கடத்தூர் அடுத்த புதூர்ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் மணி மகன் மதன்குமார் (29). இவர் பிராய்லர் கோழி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதன்குமார் கடத்தூருக்கு வேலை சம்மந்தமாக டூவீலரில் சென்றார். பின்னர் அங்கிருந்து வீடு நோக்கி வந்த போது களைப்படைந்தவர், பொம்மிடியில் பெட்ரோல் பங்க் அருகில் டூவீலரை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். பின்னர் கண் விழித்து பார்த்தபோது, சட்டை பையில் வைத்திருந்த இருந்த செல்போனை காணவில்லை. இதுகுறித்து மதன்குமார் கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.