விமான நிலையங்களில் காலிப் பணியிடம்

 

பெரம்பலூர், ஜன.19: விமான நிலையங்களில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்திருப்பதாவது: தெற்கு மண்டல இந்திய விமான நிலையங்களில் ஜூனியர் அசிஸ்டென்ட் (தீயணைப்புத்துறை) எஸ்ஆர்டி ஜூனியர் அசிஸ்டென்ட் (ஆபிஸ்), சீனியர் அசிஸ்டென்ட் (எலக்ட்ரானிக்ஸ்) மற்றும் சீனியர் அசிஸ்டென்ட் (அக்கவுட்ன்ஸ்) ஆகிய காலிப் பணியிடங்களுக்கு வரும் 26ம் தேதி வரை www.aai.aero < http://www.aai.aero/ > என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94990 55913 என்ற செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். மேற்கூறிய காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பித்து, அதிக அளவில் மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை