விமானத்தில் ஆரணியை சேர்ந்த முதியவர் மரணம்

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து கவுகாத்தி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் நேற்று மாலை 4 மணிக்கு புறப்பட தயாரானது. அதில்  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த அருள்தாஸ் (74) என்ற பயணியும் வந்திருந்தார். அருள்தாஸ் மகன், அஸ்ஸாம் மாநிலத்தில் வேலையில் இருக்கிறார். எனவே இவர் அடிக்கடி விமானத்தில் அஸ்ஸாம் சென்று மகனை பார்த்து வருவது வழக்கம். இந்நிலையில், விமானத்தில் ஏற நடந்து சென்றார். அப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். அதிர்ச்சியடைந்த சகபயணிகள், விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். விமான நிலைய மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து பயணியை பரிசோதித்தனர். ஆனால் அருள்தாஸ் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. கடுமையான மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக டாக்டா்கள் அறிவித்தனர். இதையடுத்து போலீசாா்,ஆரணியில் உள்ள அருள்தாஸ் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்