சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து கவுகாத்தி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் நேற்று மாலை 4 மணிக்கு புறப்பட தயாரானது. அதில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த அருள்தாஸ் (74) என்ற பயணியும் வந்திருந்தார். அருள்தாஸ் மகன், அஸ்ஸாம் மாநிலத்தில் வேலையில் இருக்கிறார். எனவே இவர் அடிக்கடி விமானத்தில் அஸ்ஸாம் சென்று மகனை பார்த்து வருவது வழக்கம். இந்நிலையில், விமானத்தில் ஏற நடந்து சென்றார். அப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். அதிர்ச்சியடைந்த சகபயணிகள், விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். விமான நிலைய மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து பயணியை பரிசோதித்தனர். ஆனால் அருள்தாஸ் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. கடுமையான மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக டாக்டா்கள் அறிவித்தனர். இதையடுத்து போலீசாா்,ஆரணியில் உள்ள அருள்தாஸ் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். …