விபத்தில் தொழிலாளி படுகாயம்

போடி, செப்.26: போடி அருகே மீனாட்சிபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி(54). டிரை சைக்கிள் ஓட்டும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது டிரை சைக்கிளில் போடி மேலசொக்கநாதபுரத்தில் வங்கி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே போடி சுந்தர்ராஜபுரம், பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுருளி மகன் ராஜாமணி என்பவர் ஓட்டிவந்த டூவீலருடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த வேலுச்சாமி தேனி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது