விபத்தில் சிக்கிய டூவீலர் எரிந்து விவசாயி பலி

காரிமங்கலம், ஜூலை 9: காரிமங்கலம் அருகே, கெரகோடஅள்ளி ஊராட்சி வெகாலன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்(57), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு, தனது டூவீலரில் காரிமங்கலம் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கெரகோடஅள்ளி பிரிவு ரோடு அருகே சென்றபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம், டூவீலர் மீது மோதியது. இதில் டூவீலர் எஞ்சின் தீப்பிடித்ததுடன், கோவிந்தன் உடலில் தீ பரவியது. அப்போது, பின்னால் வந்த லாரி டிரைவர் லாரியை நிறுத்தி, தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். இதில் தீக்காயத்துடன் படுகாயம் அடைந்த கோவிந்தன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை