விபத்தில் சிக்கிய கல்லூரி பெண் ஊழியரிடம் 7 பவுன் நகை திருட்டு

 

கோவை, ஜூலை 13: கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பிரதீபா (34). இவர், கோவை தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு வாகனத்தில் செல்வது வழக்கம். சம்பவத்தன்று கல்லூரிக்கு வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆட்டோ மூலம் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயின் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரதீபா, சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கியபோது நகை மாயமானதா? அல்லது அவருக்கு உதவுவதுபோல் நடித்து யாராவது நகையை திருடி சென்றனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுப்பதுபோல் ஏமாற்றி பெண் அக்கவுண்டில் ரூ.90 ஆயிரம் அபேஸ்

செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த பெண் மீட்பு

பிளாஸ்டிக் பைப்புகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து