விபத்தில் இருவர் பலி

சென்னை: அயனாவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மனோகர் (67), நேற்று முன்தினம் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த கலைச்செல்வி (30) என்பவரை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு கோயம்பேடு சென்றார். அப்போது, அரசு பஸ் மோதி 2 பேரும் படுகாயமடைந்தனர். இதில், மனோகர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கலைச்செல்வி சிகிச்சை பெற்று வருகிறார்.வேளச்சேரி கங்கை நகரை சேர்ந்த கஸ்தூரி (58), நேற்று வேளச்சேரி 100 அடி சாலையை கடந்தபோது, பைக் மோதியதில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். பைக்  ஓட்டி வந்த பள்ளிக்கரணையை சேர்ந்த தில்சர் ராஜா (22) படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்….

Related posts

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை