விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்

மதுரை, ஜூலை 4: மதுரை மாவட்ட குடும்ப நலத்துறையில் ஊர்தி ஓட்டுனராக 20 ஆண்டுகள் விபத்தின்றி பணியாற்றிய முத்துமாரி என்பவருக்கு தமிழ்நாடு அரசால் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இந்த தங்கப்பதக்கத்தை கலெக்டர் சங்கீதா நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முகமை திட்ட அலுவலர் மோனிகா ரானா, துணை இயக்குனர் (குடும்ப நலம்) நடராஜன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) செல்வராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.குமரகுருபரன், மாநகர் நல அலுவலர் வினோத்குமார், அரசு மருத்துவமனை துறை தலைவர் ஜோதி சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை