விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை செய்ய பிரதிஷ்டை பூஜை

 

ராஜபாளையம், ஆக.7: ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை செய்வதற்கான பிரதிஷ்டை பூஜை செய்யப்பட்டது. ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆதிவழிவிடும் விநாயகர் கோவிலில் வருடம் தோறும்  மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் அமைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. வருகின்ற 36வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விநாயகர் சிலை செய்வதற்கான பிரதிஷ்டை பூஜை நேற்று நடைபெற்றது. பூஜையில் திருவாடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி