விநாயகர் கோயில் உண்டியலை உடைத்த வாலிபர் சிக்கினார்

தர்மபுரி, ஆக. 15: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த ராஜகொல்லஅள்ளியை சேர்ந்தவர் தங்கராஜ் (40). இவர் அங்குள்ள விநாயகர் கோயிலில் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம், வழக்கம் போல் கோயிலுக்கு சென்றார். அப்போது அங்கு 2 பேர் கோயில் உண்டியலை உடைத்துக்கொண்டு இருந்தனர். இதைப்பார்த்த தங்கராஜ், கூச்சல் போட்டதால், 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, 2 வரையும் துரத்திச்சென்று, ஒருவனை மடக்கிப்பிடித்தனர். மற்றொருவன் தப்பியோடி விட்டான். பிடிபட்டவனை இண்டூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில், அதகப்பாடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஜோதிமணி (27) என்பதும், தப்பியோடியது அவரது கூட்டாளி சக்திவேல் (33) என்பதும் தெரியவந்தது. ஜோதிமணியை கைது செய்த போலீசார், சக்திவேலை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் கோயில் உண்டிலை வாலிபர்கள் உடைத்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை