Monday, July 8, 2024
Home » விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் அபராதம்: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி

விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் அபராதம்: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி

by kannappan

திருவள்ளூர்: தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஆணையரின் ஆணையின் பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்கள் மீது தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை வடக்கு சரக இணை ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கா.பன்னீர்செல்வம், மோகன் ஆகியோர் அனைத்து பகுதிகளிலும் வாகனத் தணிக்கை செய்தனர். இதில் சுமார் 75 வாகனங்கள் தணிக்கை செய்தது 16 வாகனங்களுக்கு ஏர் ஹாரன் பொருத்தப்பட்டது கண்டறிந்து அதற்கான கட்டணமாக ₹ 2 லட்சத்து 37 ஆயிரத்து 100   நிர்ணயம் செய்து வெளிமாநில வாகனம் ஒன்றுக்கு மட்டும் ₹ 10 ஆயிரம் உடனடி வசூல் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் கூறுகையில் அதிக ஒலியெழுப்பும் காற்று ஒலிப்பான்கள் 80 டெசிபலுக்கு மேல் உள்ள வாகனங்களின் மூலம் ஒலி மாசு ஏற்படும்போது பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகள், இருசக்கர ஓட்டுனர்கள் திடீரென சத்தம் வரும் போது நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர். இதனை தடுப்பதற்காக இதுபோன்ற தணிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது. இனி வரும் காலங்களில் இவ்வாறு காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்களை தடுத்து நிறுத்தி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்….

You may also like

Leave a Comment

16 − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi