Wednesday, July 3, 2024
Home » விதிமீறல் குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

விதிமீறல் குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

by kannappan

மதுரை: விதிமீறல் குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த குமாரவேலு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருமயம் தாலுகா வளையன்வயல் கிராமத்தில் 7 ஏக்கரில் நடத்தப்படும் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதனால், அரசுக்கு பல கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘விதிகளை மீறி கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குவாரி அளவீடு செய்யப்பட்டது. இதன்பேரில் ரூ.9 கோடி அபராதம் விதிக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விதிமீறல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், அபராத தொகையை வசூலிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அரசுத் தரப்பில்  பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.2க்கு தள்ளி வைத்தனர்….

You may also like

Leave a Comment

eighteen − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi