விண்ணப்பங்களை பதிவு செய்ய 3 நாள் சிறப்பு முகாம்

தர்மபுரி, ஆக.18: தர்மபுரி மாவட்டம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்ய, 3 நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்ய, இரண்டு கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இம்முகாம்களில் விண்ணப்பங்களை பதிவு செய்ய தவறியவர்கள், முதியோர் உதவித்தொகை மற்றும் நலவாரிய உதவித்தொகை பெறும் உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கு ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இன்று (18ம் தேதி), நாளை (19ம் தேதி) மற்றும் 20ம் தேதி ஆகிய மூன்று நாட்களில், மாவட்டம் முழுவதும் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும், இதுவரை விண்ணப்பங்களை பெறாதவர்கள், சம்மந்தப்ட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று, விண்ணப்பங்களை பெற்று சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை