விடுதி பணியாளர் சங்க கூட்டம்

 

சிவகங்கை, மே 4: சிவகங்கையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிப் பணியாளர் நலச்சங்க மாவட்ட கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் ஆறுமுகம், துணைத்தலைவர் முனீஸ்வரன் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். பொருளாளர் சிவப்பிரகாசம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி, கல்லூரி விடுதிகளில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் சமையலர், காவலர்களை பணி மாறுதல் செய்ய வேண்டும். சமையலர்களுக்கு சமையல் செய்யும் போது தேவைப்படும் உடைகள், பாதுகாப்பு உபகரணங்களை விடுதி செலவின கணக்கில் இருந்து வழங்க வேண்டும். 10ஆண்டுகளாக தூய்மை பணியாளர்களாக பணிபுரியும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை