விடுதியில் ரகசிய கேமரா பொருத்திய மேலாளர், ஊழியரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை

புதுச்சேரி, டிச. 13: புதுச்சேரி 100 அடி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தனியார் விடுதியில் காதல் ஜோடி தங்கிய அறையில் ரகசிய கேமரா இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். கேமரா பொருத்த உடந்தையாக இருந்த விடுதி ஊழியர் நைனார்மண்டபம் இருதயராஜ் (69), லைசென்சு உரிமையாளர் கம்பன் நகர் இளையஆழ்வார் (45) உடனே கைது செய்யப்பட்டனர். இருப்பினும் முக்கிய குற்றவாளிகளான விடுதி மேலாளர் தேங்காய்திட்டு ஆனந்த் (25), ஊழியர் அரியாங்குப்பம் ஓடைவெளி ஆபிரகாம் (22) இருவரும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார், மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களில் 4 மாதங்களுக்கு மேலாக பதுங்கியிருந்தனர். அவர்களை கோவா வாஸ்கோடகாமாவில் தனிப்படை கடந்த மாத இறுதியில் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஆனந்த், ஆபிரகாம் இருவரையும் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் 3 நாள் காவலில் நேற்று எடுத்தனர். புதுச்சோி மாஜிஸ்திரேட் 3 நாள் காவல் விசாரணைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்ட நிலையில் 2 பேரையும் பாதுகாப்புடன் காவலில் எடுத்த போலீசார், அவர்களை சம்பவம் நடந்த விடுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரகசிய கேமரா பொருத்த உடந்தையாக இருந்தவர்கள் யார், ஏற்கனவே காதல் ஜோடிகள் இதுபோன்ற ரகசிய படம் பிடிக்கப்பட்டதா? என்பது ெதாடர்பாக விசாரணை நடத்துகின்றனர். 3 நாள் காவல் விசாரணை முடிந்து 14ம்தேதி இருவரும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்