விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக பதிவு சேலம் வாலிபர் ஒரத்தநாட்டில் கைது: என்ஐஏ அதிகாரிகள் அதிரடி

ஒரத்தநாடு: சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி சேர்ந்த அன்பழகன் மகன் கபிலன் (24). இவர், திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துள்ளார். இவர் மீது,சேலம் ஓமனூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கபிலன் தனது கருத்துகளை பதிவு செய்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து இவர் மீது என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு பிரிவு) அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மண்டலக்கோட்டைக்கு இயற்கை விவசாயியான திருப்பதி (43) என்பவரை பார்க்க சென்றபோது அவரை என்ஐஏ அதிகாரிகள், அதிரடியாக கைது செய்து விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது….

Related posts

நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்துள்ள கடைகளால் போக்குவரத்து நெரிசலில் திணறும் கூடங்குளம் ‘மெயின் பஜார்’

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருத்தி சாகுபடியில் இந்தாண்டு நல்ல மகசூல்

விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது : ஐகோர்ட்