பெங்களூரு: விஜயபுரா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆன்லைன் உலர் திராட்சை வர்த்தக மையம் திராட்சை தொழிலை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வர்த்தகம் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தரமான திராட்சைக்கு பெயர் பெற்றது விஜயபுரா மாவட்டம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 ஆயிரம் கிலோ திராட்சைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. வெளிநாடுகளிலும் விஜயபுரா உலர் திராட்சைகளுக்கு மவுசு அதிகம். விற்பனை செய்வதில் சில பிரச்னைகள் ஏற்பட்டதால் விவசாயிகள் ஆன்லைன் வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்று சுமார் ₹2.90 கோடி மதிப்பில் மாநில அரசு ஆன்லைன் வர்த்தக மையத்தை நிறுவியது. நாடு முழுவதும் இருந்து திராட்சை வாங்குபவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் விஜயபுராவுக்கு வருகை தருகிறார்கள். இருப்பினும் வாங்குபவர்கள் முதல் தரமான திராட்சையை மட்டுமே விரும்புகின்றனர். இந்த வர்த்தக மையத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் தரம் திராட்சையை விற்பனை செய்வதற்கான வசதி இல்லை. உற்பத்தியில் 50 சதவீதம் இரண்டாவது அல்லது மூன்றாவது தர வகைக்குள் வருகிறது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
இதுகுறித்து திராட்சை பயிரிட்டு வரும் வாமன் மஹிஷி என்பவர் கூறுகையில், “ஆன்லைன் வர்த்தகம் வெளிப்படையானது. இங்கு எந்த ஒரு முகவர்களுக்கும் அல்லது இடைத்தரகர்களுக்கும் இடமில்லை. விவசாயி தனக்கு செலுத்த வேண்டிய தொகையை வாங்குபவரிடமிருந்து விரைவில் அல்லது பின்னர் பெறுவது உறுதி. இருப்பினும் ஆன்லைன் வர்த்தக மையத்தில், இரண்டாவது மற்றும் மூன்றாவது தரமான திராட்சையை விற்பனை செய்வதற்கு வசதி இல்லை. இந்த மையம் வாரத்திற்கு வெறும் 1000 டன் உலர் திராட்சை மட்டுமே விற்பனை செய்ய உதவுகிறது, இதன் விளைவாக மாவட்டத்தின் முழு திராட்சையையும் விற்பனை செய்ய கிட்டத்தட்ட 50 வாரங்கள் தேவைப்படுகிறது. திராட்சைகளின் தரம் பாதிக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய கமிஷன் முகவர்களை நாட வேண்டும் அல்லது விளைபொருட்களை கமிஷன் முகவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். மையத்தில் வர்த்தக விவகாரங்களை ஏபிஎம்சி கட்டுப்படுத்துகிறது என்றாலும். தேவைப்படும் குழுவினருக்கு பணம் செலுத்த சந்தைக் குழுவிடம் நிதி இல்லை. மாவட்டத்தில் திராட்சை சாகுபடியின் கீழ் இரண்டு லட்சம் ஏக்கர்கள் உள்ளன. திராட்சைகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பழமாக விற்கப்படுகிறது. மீதமுள்ளவை உலர் திராட்சையாக செய்யப்படுகின்றன. இத்தகைய பெரிய உற்பத்திகளுக்கு சிறந்த சந்தைப்படுத்தல் அமைப்பு தேவை’’ என தெரிவித்தார். திராட்சைகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பழமாக விற்கப்படுகிறது. மீதமுள்ளவை உலர் திராட்சையாக செய்யப்படுகின்றன.
…