Tuesday, September 17, 2024
Home » விசைபடகு மீனவர்கள் தடைவலையில் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும்: கலெக்டரிடம் மீனவர்கள் மனு

விசைபடகு மீனவர்கள் தடைவலையில் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும்: கலெக்டரிடம் மீனவர்கள் மனு

by Ranjith

 

ராமநாதபுரம், நவ.7: பாம்பன் கடல் பகுதியில் விசை படகில் சென்று சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என பைபர் நாட்டு படகு மீனவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பாம்பன் பகுதியை சேர்ந்த அப்துல்கலாம் பைபர் நாட்டு படகு மீனவர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் முடியப்பன் தலைமையில் மீனவர்கள், கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பது, ‘‘பாம்பன் கடல் பகுதியில் சுமார் 300 நாட்டு படகுகளில் 1500 மீனவர்கள் மீன்பிடி உள்ளிட்ட கடல் சார் தொழில் செய்து வருகிறோம். இந்நிலையில் கடல் ஒழுங்கு முறையை மீறி அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை வாரத்தின் 2 நாட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறி வாரத்தின் ஏழு நாட்களும் விசை படகுகளில் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இதுபோன்று வெளிமாவட்டங்களை சேர்ந்த சில மீனவர்கள் அதிக குதிரை திறன்கொண்ட மோட்டார்களை பயன்படுத்தியும், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். இதனால் பாம்பன் பகுதியை சேர்ந்த பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், குடும்பங்களும் பாதிக்கப்படுகிறது. எனவே ஏழு நாட்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதையும், வெளிமாவட்ட மீனவர்கள் வருவதையும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

You may also like

Leave a Comment

3 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi