விசிக பிரமுகரை கொல்ல முயன்ற வழக்கில் 4 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர்:  சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர், காஞ்சி மாவட்ட விசிக மாணவரணி துணை செயலாளராக உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் அப்பகுதியில் உள்ள பேக்கரி அருகில் முருகன் நின்று கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் முருகனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது. இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நடுவீரப்பட்டு வினோத், கரசங்கால் கோபிநாத், புதுநல்லூர் விக்னேஷ், பருத்திப்பேடு யுவராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரபல ரவுடி லெனினின் உறவினரான வினோத்துக்கும், முருகனுக்கும் நில தகராறு இருந்து வந்ததால் முருகனை கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்….

Related posts

76 வயதாகும் மனைவியை கொலை செய்த 84 வயதாகும் கணவர்: கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்

செங்கல்பட்டில் படைபயிற்சி சென்ற நபர் வெட்டிக்கொலை

மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயிலில் பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கறிஞர் கைது