விசிக ஐம்பெரும் விழா

திண்டுக்கல், செப்.10: திண்டுக்கல் மாநகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஐம்பெரும் விழா நேற்று நடைபெற்றது. திண்டுக்கல்லில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள், கட்சிக்கு தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் வழங்கியது, கொடியேற்றுதல், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல் என ஐம்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கட்சி நிர்வாகி முத்துவீரன் தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் தமிழ் வளவன், தேவா, மதன்குமார் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் ஆனந்தராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மைதீன் பாவா முதியோர்களுக்கு சேலை, வேட்டி வழங்கியும், மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், மாநிலத் துணைச் செயலாளர் திருச்சித்தன், மண்டல துணைச் செயலாளர் அன்பரசு, மாநில துணைச் செயலாளர் தமிழ்முரசு உட்பட பலர் பங்கேற்றனர். வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மருதுபாண்டி நன்றி கூறினார்.

 

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி