Saturday, October 5, 2024
Home » விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை போலீசார் துன்புறுத்த கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை போலீசார் துன்புறுத்த கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

by kannappan

சென்னை: வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை போலீசார் துன்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறையினருக்கு சில வழிகாட்டி விதிமுறைகளையும் வகுத்துள்ளது. புகார் தொடர்பாக விசாரணை என்ற பெயரில் தன்னையோ, தனது குடும்பத்தினரையோ துன்புறுத்தக் கூடாது என்று காவல்துறையினருக்கு உத்தரவிடக் கோரி சென்னை சோழவரத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அளித்த உத்தரவு வருமாறு: குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையினருக்கு அளவில்லா அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அதிகாரத்தை குற்ற விசாரணை முறைச்சட்ட கட்டமைப்புக்குள் பயன்படுத்த வேண்டும். குற்ற விசாரணை முறைச் சட்டப்படி, காவல் துறையினரின் விசாரணைகளின் பாதுகாவலராக மாஜிஸ்திரேட் இருந்தாலும், புலன் விசாரணையில் தலையிட அவருக்கு அதிகாரமில்லை. விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் துன்புறுத்துவதாக கூறி உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.உயர் நீதிமன்றமும், வழக்கமாக புலன் விசாரணைகளில் தலையிடாது என்ற போதும், துன்புறுத்தல்கள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தால் கண்ணை மூடிக்கொண்டு இருக்காது.ஒருவரை விசாரணைக்கு அழைக்கும் போது, உச்ச நீதிமன்றம்  பிறப்பித்த வழிகாட்டி விதிகளை காவல்துறையினர் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். புகார் தொடர்பான விசாரணைக்கு ஒருவரை அழைக்கும் போது, புகார் அளித்தவரின் பெயர், புகார் பெற்றதற்கான சான்று எண்,  எந்த தேதியில், எத்தனை மணிக்கு ஆஜராக வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்டு சம்மன் அனுப்ப வேண்டும். விசாரணை விவரங்களை காவல் நிலையத்தில் உள்ள பதிவேட்டில் குறிக்க வேண்டும். விசாரணைக்கு  ஆஜராகும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்….

You may also like

Leave a Comment

17 − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi