விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கீதாஜீவன் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி, ஜூலை 5: விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் கீதாஜீவன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முண்டியம்பாக்கம் ஊராட்சி பகுதியில் உள்ள 215வது பாகத்திற்குட்பட்ட இடங்களில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் வீடு, வீடாக சென்று வாக்காளர்களிடம் கலந்துரையாடல் மூலம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, முண்டியம்பாக்கம் ஊராட்சி தலைவர் சந்திரசேகர், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ், கிளை செயலாளர் ஜெயச்சந்திரன், விடுதலைச்சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், கிளை செயலாளர் இளையராஜா, மதிமுக கிளை செயலாளர் அன்பு, தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், வட்ட செயலாளர் அண்ணாநகர் பாலு, வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் கருணாநிதி, அல்பர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை