விக்கிரவாண்டி தொகுதியில் 25 பேர் வேட்பு மனு தாக்கல்

விக்கிரவாண்டி, ஜூன் 21: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட ஏற்கனவே 17 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து தேசிய மக்கள் கட்சி சார்பில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம், யுனைடெட் ரிபப்ளிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் விக்கிரவாண்டி வடக்குச்சிபாளையம் சேகர் மற்றும் தேசிய சமூக நீதி கட்சி சார்பில் திண்டிவனம் ஜனார்த்தனன் உள்பட 8 பேர் நேற்று ஒரே நாளில் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 25 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு