விகேபுரம் நகராட்சி ஆணையர் நியமனம்

விகேபுரம்,ஆக.25: தினகரன் செய்தி எதிரொலி காரணமாக விகேபுரம் நகராட்சிக்கு நிரந்தர ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். விகேபுரம் நகராட்சி ஆணையராக இருந்த கண்மணி திருச்செந்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளராக பணியாற்றி வரும் தாணு மூர்த்தி விகேபுரம் நகராட்சி ஆணையர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. இதனால் நகராட்சி நிர்வாக பணிகளை கவனிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து விகேபுரம் நகராட்சிக்கு நிரந்தர ஆணையர் நியமிக்கப்பட வேண்டும் என்று கடந்த 1ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் விகேபுரம் நகராட்சிக்கு நிரந்தர ஆணையராக மகேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜபாளையம் நகராட்சியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை