விகேபுரத்தில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் பிரசாரம் தொடங்கியது

விகேபுரம், பிப். 29: தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தமிழக முழுவதும் திமுக சார்பில் திண்ணை பிரசாரம் நடந்து வருகிறது. நேற்று விகேபுரத்தில் திமுக நகரச் செயலாளர் கணேசன் தலைமையிலும் நகராட்சி சேர்மன் செல்வ சுரேஷ் பெருமாள் முன்னிலையில் திமுக நிர்வாகிகள் நேற்று 1, 3 ,4, 6, 7, 10, 11, 12, 15, 20, 19 ஆகிய வார்டுகளில் வீடு வீடாக சென்று தமிழக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். இன்று மீதமுள்ள 10 வார்டுகளான 2, 5, 8, 9, 13, 14, 16, 17, 18, 21 ஆகிய வார்டுகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளன. நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் நெடுஞ்செழியன், கவுன்சிலர் விக்னேஷ், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் வாசு ஜெயராமன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், நகரப் பொருளாளர் ரவி, வார்டு செயலாளர்கள் கணேஷ், பெருமாள் சாமி, ஷாஜகான், முத்துராமலிங்கம் மற்றும் தளவாய், மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு