வாள்வீச்சு போட்டிக்கு மாவட்ட அணி தேர்வு

 

திண்டுக்கல், அக். 7: திண்டுக்கல்லில் மாவட்ட வாள்வீச்சு சங்கம் சார்பில் நடந்த மாவட்ட அணிக்கான தேர்வு போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல்லில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் வாள்வீச்சு சங்கத்தினர் சார்பில் மாவட்ட அணிக்கான தேர்வு போட்டி நடைபெற்றது. கடந்த ஒன்றாம் தேதி துவங்கிய இந்த போட்டி தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்றது. ஃபாயில், எப்பி, சேபர், ஆகிய மூன்று பிரிவுகளாக நடந்த இந்த தேர்வு போட்டிகளில் 14, 17, 19, வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் என இருபாலர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சி முகாமின் இறுதி நாளான நேற்று மாலை மாவட்ட அணி தேர்வு போட்டி நடைபெற்றது. இதில் 48 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட நபர்கள் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான வாள்வீச்சு போட்டியில் பங்கேற்க உள்ளனர். தேர்வு போட்டியில் சங்கத்தின் செயலாளர் சையது பிலால், பயிற்சியாளர் ரெக்ஸ், பெண் பயிற்சியாளர்கள் ஜெயசித்ரா, சாந்தினி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்