வால்பாறையில் சாரல் மழை-மூடுபனி

 

வால்பாறை, ஜூன் 24: வால்பாறை பகுதியில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், குளிர் மற்றும் மூடுபனி நிலவுகிறது. சோலையார் அணை, ஷேக்கல்முடி, பன்னிமேடு, கவர்கல், அக்காமலை உள்ளிட்ட பகுதிகளில் மூடுபனி நிலவுகிறது. நீடிக்கும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அவ்வப்போது, லேசான மழையும், திடீரென கன மழையும் பெய்கிறது.

இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி சோலையார் அணையில் 21மி.மீட்டர் மழையும், சின்னக்கல்லாரில் 66, கீழ்நீராறு 32, வால்பாறையில் 33மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பிஏபி திட்டத்திற்கு உயிர் நாடியாக விளங்கும் சோலையார் அணை நிரம்பி வருகிறது. 165 அடி உயரம் உள்ள சோலையார் அணையின் நீர்மட்டம் தற்போது 65.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 618 கன அடி நீர் வரத்து உள்ளது. தற்போது அணையில் 1504 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி