வால்பாறையில் குடியிருப்பில் புகுந்து சிறுத்தை அட்டகாசம் ஆட்டை கடித்து கொன்றது

வால்பாறை : வால்பாறையில் குடியிருப்பில் புகுந்த சிறுத்தை, ஆட்டை கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை  மாவட்டம் வால்பாறையில் உள்ள கக்கன்காலனி குடியிருப்பு பகுதியில் வசித்து  வருபவர் ராஜேந்திரன். இவர், 5 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை 4  மணி அளவில் கக்கன்காலனியில் புகுந்த சிறுத்தை ஒன்று, ராஜேந்திரன் வீட்டில்  கட்டப்பட்டிருந்த ஆடுகளை கடித்து குதறியது. இதில், ஒரு ஆடு பலியானது.  மற்றொரு ஆடு படுகாயம் அடைந்தது. மற்ற ஆடுகள் கத்தியபடி ஓடியது. இதைத்தொடர்ந்து ராஜேந்திரன், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ  இடத்திற்கு வந்த வனத்துறையினர், அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். படுகாயம் அடைந்த ஆட்டுக்கு, வால்பாறை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊருக்குள் புகுந்து சிறுத்தை அட்டகாசம் செய்து வருவதால், வால்பாறை பகுதியில் மக்கள் பீதி அடைந்துள்ளனர்….

Related posts

ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வெளிநாடு செல்லும் அண்ணாமலை, கட்சியை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: மக்களவை தேர்தலில் வேலை செய்யாத பாஜ நிர்வாகிகள் மீது நடவடிக்கை

சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்