வருசநாடு, செப். 2:கடமலைக்குண்டு அருகே ஆட்டுப்பறையைச் சேர்ந்தவர் செல்வகுமார் (25). இவர் மனைவி அழகு பொண்ணு (23). இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. குடிப்பழக்கம் இருந்த செல்வகுமார் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். நேற்று முன்தினம் வழக்கம் போல் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கணவர் செல்வகுமாரை மனைவி, தோட்டத்தில் உள்ள மாடுகளுக்கு தீவனம் வைக்க சொல்லி அனுப்பியுள்ளார். தீவனம் வைத்து விட்டு செல்வகுமார் மாடிக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பின் அழகுபொண்ணு மாடியில் சென்று பார்த்த போது, செல்வகுமார் சேலையில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் இருந்தார். இதுகுறித்த புகாரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.