வாலிபர் தூக்கிட்டு தற்கொலைவாலிபர் தூக்கிட்டு தற்கொலை

நாங்குநேரி: மூன்றடைப்பு அருகேயுள்ள அ.சாத்தான்குளம் ரேஷன் கடை தெருவை சேர்ந்த மாரிமுத்துவின் மகன் முருகன் (22). இவரது பெற்றோர் ஆந்திராவில் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். இதனால் ஊரில் உள்ள வீட்டில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்றுவந்த முருகன், கடந்த 27ம் தேதி இரவு தனது தாயாருடன் போனில் பேசினார். அப்போது அவரை தாயார் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த முருகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்துவந்த மூன்றடைப்பு போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்