வாலிபர் தற்கொலை

வேடசந்தூர், ஜூலை 5: வேடசந்தூர் ஒன்றியம் கல்வார்பட்டி ஊராட்சி எல்லப்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (27) சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு யோகேஸ்வரி(21 )என்ற மனைவியும், 9 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவிக்கு இடையே வீட்டு பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையடைந்த ராமகிருஷ்ணன் திடீரென வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த யோகேஸ்வரி கதவை தட்டி அவரை அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அப்பகுதியில் உள்ளவர்களை அழைத்துள்ளார். அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, ராமகிருஷ்ணன் மின்விசிறியை மாட்டும் இரும்பு கொக்கியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த துயர சம்பவம் குறித்து கூம்பூர் போலீஸ் எஸ்.ஐ திலீப்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை