திண்டுக்கல், செப். 30: திண்டுக்கல் அருகே கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (29). கூலித்தொழிலாளி. இவரது காதல் மனைவி ராதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வாடிப்பட்டியில் உள்ள தனது மாமியார் வீட்டில் இருந்த கார்த்திக், கடந்த ஒரு வாரமாக கள்ளிப்பட்டியில் தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் தாயார் வந்து பார்த்த போது கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த தாடிக்கொம்பு எஸ்ஐ பிரபாகரன், எஸ்எஸ்ஐ அழகர்சாமி, ஏட்டு சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.