வாலிபரை வெட்டிய வழக்கில் 4 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் சிக்கினார்

பெரம்பூர்: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 60வது பிளாக் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (25), கடந்த 2017ம் வருடம் செப்டம்பர் மாதம் 10ம் தேதி, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 62வது பிளாக் வழியாக நடந்து சென்றபோது, அவரை வழிமறித்த 3 பேர், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர், பணம் தர மறுத்ததால் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். இந்த வழக்கில் அருண், ஜெகன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 4 ஆண்டாக தலைமறைவாக இருந்த துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் (எ) விக்கியை (32) எம்கேபி நகர் காவல் நிலைய தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Related posts

மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு

சுரண்டையில் கிரைண்டர் செயலி மூலம் வாலிபரை மிரட்டி பணம் பறித்த 9பேர் கைது

திருச்சி அருகே பயங்கரம் இரும்பு கம்பியால் அடித்து பாட்டி கொலை