வாலிபரை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கிய வாலிபர் கைது

 

ரிஷிவந்தியம், ஜூன் 26: கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த மையனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் ஐயப்பன் (21). இவர், கடந்த சில நாட்களுக்கு முன் அதே பகுதியில் சிம் கார்டு ஒன்றை வாங்கி உள்ளார். அந்த சிம் கார்டுக்கு அதே ஊரை சேர்ந்த அருணாசலம் மகன் ஆகாஷ் (21) என்பவர் தவறுதலாக போன் செய்துள்ளார். அதன் பின்னர் அடிக்கடி ஐயப்பனுக்கு போன் செய்து மது போதையில் தரக்குறைவாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் ஐயப்பனின் நண்பர் பொற்பாலம்பட்டு பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்பவருக்கு தனது பழைய சிம் கார்டை ஐயப்பன் கொடுத்துள்ளார்.

இதையடுத்து மது போதையில் இருந்த ஆகாஷ் மீண்டும் ஐயப்பனின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு அசிங்கமாக திட்டியுள்ளார். ஆனால் தற்போது அந்த சிம்கார்டை ஐயப்பனின் நண்பர் குபேந்திரன் பயன்படுத்துவதால் அவர் மீண்டும் ஆகாஷை திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஆகாஷ், ஐயப்பன் தான் தன்னை திட்டியதாக எண்ணி மது போதையில் இருந்த ஆகாஷ் ஐயப்பனை அருகாமையில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மரத்தில் கட்டி வைத்து 2 நாட்களுக்கு முன்னர், சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து வெளியில் சொன்னால், கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டி உள்ளார்.

இதையடுத்து அவரை பார்க்க வந்த அவரது நண்பர்கள் பலத்த காயம் அடைந்திருந்த ஐயப்பனை பார்த்து அவரிடம் நடந்தது குறித்து கேட்டறிந்துள்ளனர். பின்னர் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் ஐயப்பன், ஆகாஷ் தன்னை சரமாரியாக தாக்கியதாக தெரிவித்தார். மேலும் ஐயப்பனின் உடலில் இருந்த காயங்களை வீடியோவாக எடுத்து, அதை சமூக வலைதளத்தில் பரப்பி, பின்னர் பகண்டை கூட்டு சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது அந்த பகுதியில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் புகார் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த ஆகாசை கைது செய்தனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்