வாலிபரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

ஊத்தங்கரை, ஜூலை 5: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை தர்மராஜா நகரை சேர்ந்தவர் ரவி, பெயிண்டர். இவரிடம் கென்னடி நகரைச் சேர்ந்த வினோத்(21), நவீன்(22) ஆகியோர் பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர். இருவரும் ரவியிடம் கூலிப்பணம் கேட்டுள்ளனர். அப்போது, நீங்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என கூறி, ரவி பணத்தை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும், ரவியின் செல்போனை பறித்துக் கொண்டு சென்றனர். இதுகுறித்து ரவியின் மகன் கார்த்திகேயன், அவர்களிடம் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, அவரிடம் வினோத், நவீன் தகராறு செய்ததோடு, செங்கலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கார்த்திகேயன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், சிங்காரப்பேட்டை போலீசார், வினோத், நவீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை