வாலிபரை தாக்கியவர் கைது

நெல்லை,அக்.31: நெல்லை மாவட்டம் முக்கூடல் கலியான்குளத்தை சேர்ந்தவர் வையாபுரி(31). இவரது தந்தை கிருஷ்ணன். இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த ராவனேஸ்வரன்(40) என்பவருக்கும் இடையே கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் வையாபுரி கடந்த 29ம் தேதி களியன்குளம் பகுதி வயல்காட்டில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அங்குவந்த ராவனேஸ்வரன் அவரிடம் எனது அண்ணன் வயல்காட்டில் எப்படி நீ மாடுகளை மேய்ச்சலுக்கு விடலாம் என கூறி தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வையாபுரி முக்கூடல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்ஐ கதிரவன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி ராவனேஸ்வரனை கைது செய்தார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை