வாலிபரை தாக்கியவர் கைது

கயத்தாறு, ஜூலை 19: கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி மேலத்தெருவை சேர்ந்த முத்துமாலை மகன் ரவி (32). இவருக்கும், இதே தெருவைச் சேர்ந்த கடற்கரை மகன் சுடலைமணி (30) என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக அவ்வப்போது தகராறு நடந்துவந்தது‌. நேற்று சுடலைமணி, ரவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டதோடு கல்லாலும், கட்டையாலும் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த ரவி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கயத்தாறு போலீசார் சுடலைமணியை கைதுசெய்தனர்.

Related posts

வட்டார வள மையங்களில் பள்ளி மாணவர்களுக்கு புத்தக திருவிழா போட்டி

தூய்மை பணியாளர்களுக்கு கயத்தாறில் மருத்துவ முகாம்

தூத்துக்குடி சிதம்பரநகர் சாலையில் வரும் 29ல் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி