வாலிபரை கத்தியால் குத்திய பெயிண்டர் கைது

 

கோவை, ஜூன் 17: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (28). இவர், கோவை ராமநாதபுரம் சூரியன் தெருவில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று கோவிந்தசாமி நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர், கோவிந்தசாமியிடம் மது குடிக்க பணம் தருமாறு மிரட்டினார். அவர் தரமறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், தகாத வார்த்தைகளால் பேசி கோவிந்த சாமியை கத்தியால் குத்தினார். இதில் தலையில் காயமடைந்த கோவிந்தசாமி வலியால் சத்தம் போட்டார்.

அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கத்திக்குத்தில் காயமடைந்த கோவிந்தசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கோவிந்தசாமியை கத்தியால் குத்தியது நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த பெயிண்டர் யுவராஜ் (19) என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்