வாலிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்: 3 பேர் கைது

சாம்ராஜ்நகர்: வாலிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த 8 பேரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சாம்ராஜ்நகர் டவுன் பகுதியை சேர்ந்தவர் ஜபிகான். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் சாம்ராஜ்நகர்-மைசூரு சாலையில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றனர்.  அதே போல் குடும்ப உறுப்பினர்களை தொடர்புகொண்டு பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். இதில் அச்சம் கொண்ட குடும்பத்தினர் 6.70 லட்சம் கொடுத்து வாலிபரை மீட்டு வந்தனர். இந்நிலையில் வீட்டுக்கு வந்த ஜபிகான் நடந்த சம்பவத்தை நஞ்சன்கூடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் வாலிபரை கடத்தி மிரட்டல் விடுத்த செல்போன் நம்பரை ஆய்வு செய்தனர். அப்போது பிடதி பகுதியில் இருப்பது தெரிய வந்தது.  சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு பதுங்கியிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் ஜாவீத்கான் (40), மொகமத்நாசீப் (26), சாகீர்யுத்தின் (24) என்றும் மேலும் 5 பேருடன் வாலிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்தனர்.  இவர்களை கைது செய்த போலீசார் இவர்களிடமிருந்த துப்பாக்கி, கத்தி உட்பட பொருட்களை பறிமுதல் செய்து தலைமறைவாகியுள்ள 5 பேரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்….

Related posts

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

பந்தலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு கடத்திய உயர் ரக போதை பொருள் பறிமுதல்

தண்ணீர் பிடிப்பதில் தகராறு நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது