வாலிபருக்கு அரிவாள் வெட்டு

 

சோழவந்தான், ஜூன் 14: சோழவந்தான் அருகே கீழமட்டையான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(35). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சித்தன்(37). அருகருகே தோட்டத்து வீட்டில் குடியிருக்கும் இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த தகராறில் சித்தன், ரமேஷை அரிவாளால் வெட்டி உள்ளார். பலத்த காயமடைந்த ரமேஷை, அருகில் உள்ளவர்கள் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரமேஷ்க்கு முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காடுபட்டி எஸ்.ஐ.குபேந்திரன் வழக்கு பதிவு செய்து சித்தனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்