சேலம், ஜூன் 22: சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் சமையல் வேலைக்காக ஈரோட்டை சேர்ந்த தினேஷ்(19) என்பவர் வந்திருந்தார். சமையல் பணி முடிந்து ஊருக்கு செல்வதற்காக நேற்றுமுன்தினம் இரவு உத்தமசோழபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு டூவீலரில் வந்த 2 பேர், வாலிபர் தினேசிடம் பேசிக்கொண்டே அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ், கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.