வாலிபரிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது

 

அரூர், பிப்.2: அரூர் அடுத்த செக்காம்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்(33). இவர் மத்தியம்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மதியம், அரூர் குரங்குபள்ளம் டாஸ்மாக் கடையில், மது வாங்குவதற்காக சுரேஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், சுரேஷ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை திருடிக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

அப்போது, சுரேஷ் சத்தம் போட்டபடி அவர்களை பிடிக்க முயன்றார். மேலும் அங்கிருந்த போலீசார் செல்போனை திருடிச்சென்ற இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர்கள் மோப்பிரிப்பட்டியை சேர்ந்த ரஞ்சித்(26), அண்ணாநகர் இருதயராஜ்(47) என்பது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அரூர் சிறையில் அடைத்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்